இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ முன்பு பிச்சை எடுத்து நூதன ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
கோவை: பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், சொத்து வரி உயர்வை கண்டித்தும் மக்கள் நீதி மய்யம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
மத்திய அரசு உயர்த்தியபெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும் தமிழக அரசு உயர்த்திய சொத்துவரி உயர்வை கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டத்தில் செஞ்சிலுவைச் சங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மத்திய மாவட்டச் செயலாளர் பிரபு, வடக்கு மாவட்டச் செயலாளர் தர்மராஜ், மேற்கு மாவட்டச் செயலாளர் சிட்கோ சிவா, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதில் கோவை மாவட்ட மக்கள் நீதி மையத்தின் மகளிர் அணியினரும் கலந்து கொண்டனர். இதில் ஆட்டோ ஓட்டுநர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை உணர்த்தும் விதமாக ஆட்டோ முன்பு பிச்சை எடுத்து நூதன ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.