கற்பகம் உயர் கல்விக்கழகத்தில் 2018-ஆம் கல்வியாண்டில் பயின்ற 2108-மாணவர்கள் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றனர்.
கோவை: கற்பகம் உயர் கல்விக்கழகத்தில் 2018-ஆம் கல்வியாண்டில் பயின்ற 2108 மாணவர்கள் 09.04.2022, சனி அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், பட்டம் பெற்றனர்.
கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் இராச.வசந்தகுமார் பட்டமளிப்பு விழாவிற்குத் தலைமையேற்றார். பெரியார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் P.குழந்தைவேல் பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தி, பட்டங்கள் வழங்கினார்.

அவர்தம் உரையில், 'இளைஞர்களின் தளராத தன்னம்பிக்கையே, சவாலான வாய்ப்புகளையும் வரங்களாக்கித் தருகின்றன' என்றார்.
குறையாத ஆர்வம், புதியவற்றை நுட்பமாக ஆராய்கின்ற திறன், ஆர்வம் குறையாத ஈடுபாடு, தொடர் முயற்சி, தோல்வியிலும் தளராமை, அனுபவங்களை ஆளுமை வளர்ச்சிக்கு மூலதனமாக்குதல் ஆகியவற்றை இளைஞர்கள் கடைப்பிடித்தால் வெற்றி உறுதி என்றார்.
இனி வருகிற காலங்களிலும் பெருந்தொற்று போன்ற இயற்கை அபாயங்களிலிருந்து மக்களைக் காப்பாற்ற அறிவியலும் தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட வேண்டியுள்ளதை இளைஞர்கள் உணரவேண்டும். அதற்கேற்ப அவரவரும் தமக்கு ஆர்வமுள்ள துறையில் ஆழ்ந்த அறிவைப் பெற்று, ஆய்வு நோக்கில் சமுதாயத்துக்குப் பயனளிக்கின்ற ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார்.
கல்வியின் பயன் என்பது, மண் பயனுற வாழவேண்டும்' என்ற பொது நோக்கத்தை நமக்குள் நிலைக்கச் செய்வதாகும். இளைஞர்கள் அத்தகைய சமுதாயப்
பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டும்; அவர்கள் நாடு போற்றும்படி வாழ்வதற்கு அடிப்படையாக ஒழுக்க நெறிமுறைகளில் சிறக்க வேண்டும்' என்று கல்வியின் வழியான சமுதாயப் பண்பாட்டின் இன்றைய தேவையினைப் பட்டம் பெற்ற இளைஞர்களிடம் அறிவுறுத்தினார்.
அறிவியல் வளர்ச்சி என்ற நோக்கில் மட்டுமல்லாமல், மனித சமுதாயத்தின் அமைதியை நிலைநாட்டவும் இளைஞர்களின் அறிவும், ஆக்கமும் பயன்படவேண்டும் என்றார்.
மாணவர்கள் இன்று பேரெண்ணிக்கையில், பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுகிற வாய்ப்புகள் பெருகியுள்ளன. இருந்தபோதிலும் அவர்கள் அவ்வறிவை ஆய்வுப்படிப்புகள் வரையில் மேம்படுத்திக்கொள்வதற்குரிய விழிப்புணர்வை குறைவாகவே பெற்றுள்ளனர்.

இன்று இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் மாணவர்கள் தங்களது ஆய்வுப்பங்களிப்புகளாலும், காப்புரிமை போன்ற அறிவுசார் சொத்தினாலும் வருங்கால வாழ்கையை வளமாக்கிக் கொள்வதற்கு வாய்ப்புகள் மிகப் பெருகியுள்ளன.
அவ்வாய்ப்புகளை அவர்கள் முறையாகப் பயன்கொள்வதற்குத் தமது இலக்கினைத் தெளிவாக அறிந்திருத்தலும், துல்லியமாக அதனை வரையறுத்துக் கொள்ளுதலும், இலக்கினைச் சிறந்த செயல் திட்டமாக அமைத்துக்கொள்ளுதலும், செயலாக்கத்துக்குரிய தளராத மனவுறுதியைக் கொண்டிருத்தலும் எந்நாளும் தேவை என்றார்.
ஜப்பான் போன்ற வளர்கின்ற நாட்டிலுள்ள இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு, மொழித்திறன் மேம்பாடு, மென்திறன் மேம்பாடு, அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் திறன் மேம்பாடு மற்றும் ஆளுமைத்திறன் மேம்பாடு ஆகியவை அடிப்படையாகவுள்ளன.
இந்திய இளைஞர்களும் மேற்கண்ட திறன்களை ஒருசேர வளர்த்துக்கொண்டு நாடு பயனுற வாழவேண்டும் என்று வாழ்த்துக் கூறினார்.

கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் இராச.வசந்தகுமார் பட்டமளிப்பு விழாவிற்குத் தலைமையேற்றார். பெரியார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் P.குழந்தைவேல் பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தி, பட்டங்கள் வழங்கினார்.
அவர்தம் உரையில், 'இளைஞர்களின் தளராத தன்னம்பிக்கையே, சவாலான வாய்ப்புகளையும் வரங்களாக்கித் தருகின்றன' என்றார்.
குறையாத ஆர்வம், புதியவற்றை நுட்பமாக ஆராய்கின்ற திறன், ஆர்வம் குறையாத ஈடுபாடு, தொடர் முயற்சி, தோல்வியிலும் தளராமை, அனுபவங்களை ஆளுமை வளர்ச்சிக்கு மூலதனமாக்குதல் ஆகியவற்றை இளைஞர்கள் கடைப்பிடித்தால் வெற்றி உறுதி என்றார்.
இனி வருகிற காலங்களிலும் பெருந்தொற்று போன்ற இயற்கை அபாயங்களிலிருந்து மக்களைக் காப்பாற்ற அறிவியலும் தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட வேண்டியுள்ளதை இளைஞர்கள் உணரவேண்டும். அதற்கேற்ப அவரவரும் தமக்கு ஆர்வமுள்ள துறையில் ஆழ்ந்த அறிவைப் பெற்று, ஆய்வு நோக்கில் சமுதாயத்துக்குப் பயனளிக்கின்ற ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார்.
கல்வியின் பயன் என்பது, மண் பயனுற வாழவேண்டும்' என்ற பொது நோக்கத்தை நமக்குள் நிலைக்கச் செய்வதாகும். இளைஞர்கள் அத்தகைய சமுதாயப்
பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டும்; அவர்கள் நாடு போற்றும்படி வாழ்வதற்கு அடிப்படையாக ஒழுக்க நெறிமுறைகளில் சிறக்க வேண்டும்' என்று கல்வியின் வழியான சமுதாயப் பண்பாட்டின் இன்றைய தேவையினைப் பட்டம் பெற்ற இளைஞர்களிடம் அறிவுறுத்தினார்.
அறிவியல் வளர்ச்சி என்ற நோக்கில் மட்டுமல்லாமல், மனித சமுதாயத்தின் அமைதியை நிலைநாட்டவும் இளைஞர்களின் அறிவும், ஆக்கமும் பயன்படவேண்டும் என்றார்.
மாணவர்கள் இன்று பேரெண்ணிக்கையில், பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுகிற வாய்ப்புகள் பெருகியுள்ளன. இருந்தபோதிலும் அவர்கள் அவ்வறிவை ஆய்வுப்படிப்புகள் வரையில் மேம்படுத்திக்கொள்வதற்குரிய விழிப்புணர்வை குறைவாகவே பெற்றுள்ளனர்.
இன்று இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் மாணவர்கள் தங்களது ஆய்வுப்பங்களிப்புகளாலும், காப்புரிமை போன்ற அறிவுசார் சொத்தினாலும் வருங்கால வாழ்கையை வளமாக்கிக் கொள்வதற்கு வாய்ப்புகள் மிகப் பெருகியுள்ளன.
அவ்வாய்ப்புகளை அவர்கள் முறையாகப் பயன்கொள்வதற்குத் தமது இலக்கினைத் தெளிவாக அறிந்திருத்தலும், துல்லியமாக அதனை வரையறுத்துக் கொள்ளுதலும், இலக்கினைச் சிறந்த செயல் திட்டமாக அமைத்துக்கொள்ளுதலும், செயலாக்கத்துக்குரிய தளராத மனவுறுதியைக் கொண்டிருத்தலும் எந்நாளும் தேவை என்றார்.
ஜப்பான் போன்ற வளர்கின்ற நாட்டிலுள்ள இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு, மொழித்திறன் மேம்பாடு, மென்திறன் மேம்பாடு, அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் திறன் மேம்பாடு மற்றும் ஆளுமைத்திறன் மேம்பாடு ஆகியவை அடிப்படையாகவுள்ளன.
இந்திய இளைஞர்களும் மேற்கண்ட திறன்களை ஒருசேர வளர்த்துக்கொண்டு நாடு பயனுற வாழவேண்டும் என்று வாழ்த்துக் கூறினார்.