இந்த நூற்றாண்டு விழாவில் தமிழக அரசின் சார்பில் சிறப்பு விருந்தினராக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா கலந்து கொள்கின்றனர்.
கோவை: 48-ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில் விருது வழங்கும் விழா இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிபங்கேற்கிறார்.
கோவையில் செயல்பட்டு வரும் கே.ஜி குழும நிறுவனத்தின் நூற்றாண்டு விழா மற்றும் மருத்துவமனையின் 48-ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில் விருது வழங்கும் விழா இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிபங்கேற்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய கேஜி மருத்துவமனையின் தலைவர் மற்றும் மருத்துவர் பத்மஸ்ரீ பக்தவச்சலம் பேசியதாவது:-
கோவையில் கே.ஜி.மருத்துவமனை தொடங்கி 48 ஆண்டுகள் நிறைவு பெற்றதையும், என் தந்தை கே.கோவிந்தசாமி நாயுடு அவர்களால் நிறுவப்பட்ட கே.ஜி. குழுமங்களின் நூற்றாண்டு விழாவையும் இன்று கொண்டாட உள்ளோம்.
இந்த மருத்துவமனையில் சுமார் 27 லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்குச் சிறப்பான சிகிச்சை அளித்துள்ளோம் .மகளிர் மருத்துவம் தீவிர சிகிச்சைப் பிரிவு, விபத்து பிரிவு, என பல பிரிவுகளில் உயிர் காக்கும் துறைகள் உள்ளன. இந்த மருத்துவமனை லாப நோக்கத்திற்காகத் துவக்கப்பட்டது இல்லை என கூறினர்.
எங்கள் மருத்துவமனையில் 250 மருத்துவர்கள், 300 செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவமனை பணியாளர்கள் என சுமார் 1250 பேர் இங்கு பணியாற்றி வருகின்றனர்.
மேலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு அவர்களின் சேவையைப் பாராட்டும் வகையிலும் 135 பேருக்கு விருது வழங்கப்படுகிறது.
இந்த நூற்றாண்டு விழாவில் தமிழக அரசின் சார்பில் சிறப்பு விருந்தினராக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா கலந்து கொள்கின்றனர்.
கோவையில் செயல்பட்டு வரும் கே.ஜி குழும நிறுவனத்தின் நூற்றாண்டு விழா மற்றும் மருத்துவமனையின் 48-ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில் விருது வழங்கும் விழா இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிபங்கேற்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய கேஜி மருத்துவமனையின் தலைவர் மற்றும் மருத்துவர் பத்மஸ்ரீ பக்தவச்சலம் பேசியதாவது:-
கோவையில் கே.ஜி.மருத்துவமனை தொடங்கி 48 ஆண்டுகள் நிறைவு பெற்றதையும், என் தந்தை கே.கோவிந்தசாமி நாயுடு அவர்களால் நிறுவப்பட்ட கே.ஜி. குழுமங்களின் நூற்றாண்டு விழாவையும் இன்று கொண்டாட உள்ளோம்.
இந்த மருத்துவமனையில் சுமார் 27 லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்குச் சிறப்பான சிகிச்சை அளித்துள்ளோம் .மகளிர் மருத்துவம் தீவிர சிகிச்சைப் பிரிவு, விபத்து பிரிவு, என பல பிரிவுகளில் உயிர் காக்கும் துறைகள் உள்ளன. இந்த மருத்துவமனை லாப நோக்கத்திற்காகத் துவக்கப்பட்டது இல்லை என கூறினர்.
எங்கள் மருத்துவமனையில் 250 மருத்துவர்கள், 300 செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவமனை பணியாளர்கள் என சுமார் 1250 பேர் இங்கு பணியாற்றி வருகின்றனர்.
மேலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு அவர்களின் சேவையைப் பாராட்டும் வகையிலும் 135 பேருக்கு விருது வழங்கப்படுகிறது.
இந்த நூற்றாண்டு விழாவில் தமிழக அரசின் சார்பில் சிறப்பு விருந்தினராக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா கலந்து கொள்கின்றனர்.