கோவையில் கிணற்றில் தவறி விழுந்த மானை பத்திரமாக மீட்ட வனத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு..!

வழி தவறி ஊருக்குள் வந்த மான்குட்டியை நாய்கள் துரத்தியதால் தவறி கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என வனத்துறையினர் தகவல்.



கோவை: கோவையில் கிணற்றில் தவறி விழுந்த மான் குட்டியை வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

கோவை நீலாம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது மான் நடமாட்டம் காணப்படும். மேய்ச்சலுக்காக வரும் மான்கள் வழிதவறி அருகே உள்ள கிராமங்கள் வழியாக வந்து மீண்டும் வனப்பகுதிக்குள் செல்வது வழக்கம்.

இந்நிலையில், நீலாம்பூரை அடுத்த பீடம்பள்ளி கிராமத்தில் தங்கராஜ் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் மான் ஒன்று தவறி விழுந்ததை அதன் அங்கிருந்த பணியாளர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து அவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.



பின்னர், தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கிணற்றில் விழுந்த மான்குட்டியை வலை மற்றும் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.



இதையடுத்து, மான்குட்டியின் உடல் நலம் ஆய்வு செய்யப்பட்ட வனத்துறை வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. மீட்கப்பட்ட மான்குட்டியை மதுக்கரை வனச்சரகம், எட்டிமடை பீட், மட்டத்து காடு சராகம் காப்புக்காடு பகுதியில் பத்திரமாக விடுவிக்கப்பட்டது.



இதனிடையே, வழி தவறி ஊருக்குள் வந்த மான்குட்டியை நாய்கள் துரத்தியதால் தவறி கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என்றும் மான்குட்டியின் உடல் நலம் மிகவும் சீராக உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.





Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...