22வது வார்டு உறுப்பினர் கோவை பாபு புதிய சுகாதார அலுவலகத்தை திறந்து வைத்து தூய்மை பணியாளர்களுக்கு கவச உடை மற்றும் கையுறைகளை வழங்கினார்.
கோவை: கோவை மாநகராட்சி 22வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள உதவும் வகையில் சேரன் மாநகரில் சுகாதார அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.
கோவை மாநகராட்சி 22வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோவை பாபு புதிய சுகாதார அலுவலகத்தை திறந்து வைத்து தூய்மை பணியாளர்களுக்கு கவச உடை மற்றும் கையுறைகளை வழங்கினார்.

இதுகுறித்து தூய்மைப் பணியாளர்களிடம் அவர் பேசியதாவது:-
கோவை மாநகராட்சி 22வது மாமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின் முதலில் தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து உள்ளேன். நீங்கள் தெரிவித்த குறைகள் ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்யப்படும்.
குடியிருப்பு பகுதிகளில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும்போது தூய்மைப் பணியாளர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
சில இடங்களில் மக்கள் கோபமாக பேசினாலும் அமைதி காக்க வேண்டும். சிறப்பான முறையில் தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்படும் தூய்மை பணி திட்டங்கள் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த உங்கள் ஒத்துழைப்பு மிக அவசியம்." என்றார்.

நிகழ்ச்சியில் கோவை மேற்கு மண்டல திமுக மாணவரணி துணை அமைப்பாளர் பிரபாகரன், தொ.மு.ச பேரவை துணைத் தலைவர் ரத்தினவேலு, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல சுகாதார ஆய்வாளர் முருகா, சுகாதார ஆய்வாளர் குணசேகரன், சுகாதார மேற்பார்வையாளர் (பொறுப்பு) கன்னியப்பன், சுகாதார மேற்பார்வையாளர் சாமிநாதன் மற்றும் 22வது வட்ட திமுக கழக உறுப்பினர்கள், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கோவை மாநகராட்சி 22வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோவை பாபு புதிய சுகாதார அலுவலகத்தை திறந்து வைத்து தூய்மை பணியாளர்களுக்கு கவச உடை மற்றும் கையுறைகளை வழங்கினார்.
இதுகுறித்து தூய்மைப் பணியாளர்களிடம் அவர் பேசியதாவது:-
கோவை மாநகராட்சி 22வது மாமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின் முதலில் தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து உள்ளேன். நீங்கள் தெரிவித்த குறைகள் ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்யப்படும்.
குடியிருப்பு பகுதிகளில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும்போது தூய்மைப் பணியாளர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
சில இடங்களில் மக்கள் கோபமாக பேசினாலும் அமைதி காக்க வேண்டும். சிறப்பான முறையில் தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்படும் தூய்மை பணி திட்டங்கள் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த உங்கள் ஒத்துழைப்பு மிக அவசியம்." என்றார்.
நிகழ்ச்சியில் கோவை மேற்கு மண்டல திமுக மாணவரணி துணை அமைப்பாளர் பிரபாகரன், தொ.மு.ச பேரவை துணைத் தலைவர் ரத்தினவேலு, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல சுகாதார ஆய்வாளர் முருகா, சுகாதார ஆய்வாளர் குணசேகரன், சுகாதார மேற்பார்வையாளர் (பொறுப்பு) கன்னியப்பன், சுகாதார மேற்பார்வையாளர் சாமிநாதன் மற்றும் 22வது வட்ட திமுக கழக உறுப்பினர்கள், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.