கோவை சேரன் மாநகர் மாநகராட்சி 22வது வார்டில் சுகாதார அலுவலகம் திறப்பு..!

22வது வார்டு உறுப்பினர் கோவை பாபு புதிய சுகாதார அலுவலகத்தை திறந்து வைத்து தூய்மை பணியாளர்களுக்கு கவச உடை மற்றும் கையுறைகளை வழங்கினார்.


கோவை: கோவை மாநகராட்சி 22வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள உதவும் வகையில் சேரன் மாநகரில் சுகாதார அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி 22வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோவை பாபு புதிய சுகாதார அலுவலகத்தை திறந்து வைத்து தூய்மை பணியாளர்களுக்கு கவச உடை மற்றும் கையுறைகளை வழங்கினார்.



இதுகுறித்து தூய்மைப் பணியாளர்களிடம் அவர் பேசியதாவது:-

கோவை மாநகராட்சி 22வது மாமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின் முதலில் தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து உள்ளேன். நீங்கள் தெரிவித்த குறைகள் ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்யப்படும்.

குடியிருப்பு பகுதிகளில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும்போது தூய்மைப் பணியாளர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

சில இடங்களில் மக்கள் கோபமாக பேசினாலும் அமைதி காக்க வேண்டும். சிறப்பான முறையில் தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்படும் தூய்மை பணி திட்டங்கள் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த உங்கள் ஒத்துழைப்பு மிக அவசியம்." என்றார்.



நிகழ்ச்சியில் கோவை மேற்கு மண்டல திமுக மாணவரணி துணை அமைப்பாளர் பிரபாகரன், தொ.மு.ச பேரவை துணைத் தலைவர் ரத்தினவேலு, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல சுகாதார ஆய்வாளர் முருகா, சுகாதார ஆய்வாளர் குணசேகரன், சுகாதார மேற்பார்வையாளர் (பொறுப்பு) கன்னியப்பன், சுகாதார மேற்பார்வையாளர் சாமிநாதன் மற்றும் 22வது வட்ட திமுக கழக உறுப்பினர்கள், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...