இராஜ வீதியில் மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்தில் அதிக கட்டணம் வசூல் செய்த குத்தகைத்தாரின் ஒப்பந்தம் ரத்து


கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மத்திய மண்டலம் 83-வது வார்டுக்குட்பட்ட இராஜ வீதிலுள்ள மாநகராட்சி இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்தில் அதிக கட்டணம் வசூல் செய்த குத்தகைத்தாரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, அப்பணிக்கு மாநகராட்சி பணியாளர்கள் அமர்த்தப்பட்ட பணியாளர்கள் பணியில் இல்லாமல் அலுவலக முன்அனுமதியின்றி விடுப்பில் சென்ற மாநகராட்சி பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை அன்று (10.01.2017) எடுக்கப்பட்டுள்ளது.

நான்கு சக்கர வரகனத்திற்கு ரூ.20 கூடுதல் கட்டணம் வசூல் செய்த குத்தகைத்தாரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, அப்பணிக்கு மாநகராட்சி பணியாளர்கள் அமர்த்தப்பட்ட பணியாளர்கள் பணியில் இல்லாமல் இருப்பதாக புகார் பெறப்பட்டதையடுத்து உதவி வருவாய் அலுவலர், சிறப்பு வரி ஆய்வாளர் மற்றும் வரி வசூலர் ஆகியோர் அன்று 09.01.2017 மற்றும் 10.01.2017 ஆகிய தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். 

மேலும், இவ்வலுவலகம் மூலம் மாநகராட்சி பணியாளர் செல்வக்குமார் மற்றும் 3 தனியார் பணியாளர்கள் என நான்கு பணியாளர்கள் வசூல் பணியினை மேற்கொண்டனர். ஆனால் 4 நபர்களும் வெளியூர் செல்வது தொடர்பாக அலுவலகத்திற்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. மேலும், மேற்படி 4 பணியாளர்களும் இவ்வலுவலக அனுமதியின்றி அவர்களே மூன்று தனியார் பணியாளர்களை பணியில் அமர்த்தி இருந்தனர். இதனால் மாநகராட்சி பணியாளர் செல்வக்குமார் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...