எல்.ஐ.சி பங்கு விற்பனையை எதிர்த்து பல்வேறு இடங்களில் இன்று அகில இந்திய காப்பீடு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகக் கோவையில் எல்.ஐ.சி அனைத்து அலுவலகங்கள் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: எல்.ஐ.சி பங்குகள் விற்கப்படுவதைக் கண்டித்து எல்.ஐ.சி ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எல்ஐசி பங்கு விற்பனையை எதிர்த்து பல்வேறு இடங்களில் இன்று அகில இந்திய காப்பீடு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாகக் கோவையில் எல்ஐசி அனைத்து அலுவலகங்கள் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை திருச்சாலையிலுள்ள எல்.ஐ.சி பகுதி அலுவலகத்தின் முன்பு அகில இந்திய காப்பீடு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் வி.சுரேஷ், துளசிதரன் உள்ளிட்ட திரளான ஊழியர்கள் பங்கேற்று காப்பீடு பங்குகளின் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன முழக்கமிட்டனர்.
இதேபோன்று கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர் கிளை, அவிநாசிசாலை கிளை, 100 அடி சாலை கிளை, டாடாபாத் கிளை, வடகோவை கிளை, ஆர்.எஸ்.புரம் கிளை, போத்தனூர் கிளை மற்றும் மாவட்டங்களில் அமைந்துள்ள மற்ற கிளைகளின் முன்பாகவும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.