ஆய்வு மேற்கொண்ட மேயர் மேலும் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த படும் என்றும் தனியார்ப் பள்ளிகளை காட்டிலும் சிறந்த வசதிகள் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி மாஸ்கோ நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியை மாநகராட்சி மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாஸ்கோ நகரில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளி போதிய அடிப்படை வசதியின்றி காணப்படுவதாகவும், ஏறத்தாள 800-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் தொடக்கப்பள்ளியில் 5- ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
மேலும் இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என கடந்த மார்ச் 7-ஆம் தேதி திருப்பூர் மாநகராட்சியின் மேயர் தினேஷ் குமாரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் மற்றும் திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் சுப்ரமணியம் அப்பள்ளிக்கு நேரில் சென்றனர்.
ஆய்வு மேற்கொண்ட மேயர் மேலும் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த படும் என்றும் தனியார்ப் பள்ளிகளை காட்டிலும் சிறந்த வசதிகள் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.