தமிழகத்தை உலுக்கிய கோகுல் ராஜ் மரணத்தில் முக்கிய குற்றவாளியான யுவராஜ் நிர்வாக காரணங்களுக்காக கோவை மத்திய சிறைக்கு மாற்றம்.
கோவை: கோகுல் ராஜ் கொலை வழக்கில் 3 ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளியை நிர்வாக காரணங்களுக்காக மதுரை மத்திய சிறையிலிருந்து கோவை மத்திய சிறைக்கு மாற்றினர்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் 3 ஆயுள் தண்டனை பெற்று, மதுரை சிறையில் அடைக்கப்பட்ட யுவராஜ், நிர்வாக காரணமாக கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில், பலத்த பாதுகாப்புடன் வந்த யுவராஜ் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் கடந்த 8ம் தேதி யுவராஜ், அவரது ஓட்டுநருக்கு 3 ஆயுள் தண்டனை மற்றும் கூட்டாளிகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் 10 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளியான யுவராஜை நிர்வாக காரணங்களுக்காக மதுரை மத்திய சிறையிலிருந்து கோவை மத்திய சிறைக்கு மாற்றம் செய்து சிறைத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதையடுத்து, யுவராஜ் மதுரை மத்திய சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் கோவை சிறைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர், கோவை மத்திய சிறைக்கு வந்த யுவராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் 3 ஆயுள் தண்டனை பெற்று, மதுரை சிறையில் அடைக்கப்பட்ட யுவராஜ், நிர்வாக காரணமாக கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில், பலத்த பாதுகாப்புடன் வந்த யுவராஜ் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் கடந்த 8ம் தேதி யுவராஜ், அவரது ஓட்டுநருக்கு 3 ஆயுள் தண்டனை மற்றும் கூட்டாளிகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் 10 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளியான யுவராஜை நிர்வாக காரணங்களுக்காக மதுரை மத்திய சிறையிலிருந்து கோவை மத்திய சிறைக்கு மாற்றம் செய்து சிறைத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதையடுத்து, யுவராஜ் மதுரை மத்திய சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் கோவை சிறைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர், கோவை மத்திய சிறைக்கு வந்த யுவராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.