கோவை மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள தேசிய மற்றும் உலக நுகர்வோர் தின விழா மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் காலாண்டு கூட்டத்தை அனைத்து நுகர்வோர் அமைப்புகள் புறக்கணித்துள்ளனர்.
கோவை: தேசிய மற்றும் உலக நுகர்வோர் தின விழா மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் காலாண்டு கூட்டத்தில், அனைத்து நுகர்வோர் அமைப்புகளும் கலந்து கொள்வதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள தேசிய மற்றும் உலக நுகர்வோர் தின விழா மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் காலாண்டு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பாகப் பள்ளி கல்லூரிகளில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி ஓவியப்போட்டி ஆகியவைகளில் கலந்துகொண்ட மாணவ மாணவியர்களுக்குப் பரிசளிப்பும் சான்றிதழ் வழங்குதல் நிகழ்ச்சியும் மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட நுகர்வோர் அமைப்புகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் மாலையில் நுகர்வோர் அமைப்புகளுடன் கூட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னையில் முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கூட்டம் நடைபெற உள்ளதால் மாவட்ட ஆட்சியர் கலந்துகொள்ள இயலாத சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வேறொரு தேதிக்கு இந்நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கோவையில் உள்ள அனைத்து தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளும் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.
ஆனால் வேறு ஒரு தேதிக்கு நிகழ்ச்சி நடத்த இயலாது என்று மாவட்ட நிர்வாகம் மறுத்ததால் நாளை நடைபெற உள்ள தேசிய உலக நுகர்வோர் தினவிழா நிகழ்ச்சியை அனைத்து நுகர்வோர் அமைப்புகளும் கலந்து கொள்வதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.
இதற்கான கடிதம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோருக்கு கடிதம் மூலம் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள தேசிய மற்றும் உலக நுகர்வோர் தின விழா மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் காலாண்டு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பாகப் பள்ளி கல்லூரிகளில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி ஓவியப்போட்டி ஆகியவைகளில் கலந்துகொண்ட மாணவ மாணவியர்களுக்குப் பரிசளிப்பும் சான்றிதழ் வழங்குதல் நிகழ்ச்சியும் மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட நுகர்வோர் அமைப்புகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் மாலையில் நுகர்வோர் அமைப்புகளுடன் கூட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னையில் முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கூட்டம் நடைபெற உள்ளதால் மாவட்ட ஆட்சியர் கலந்துகொள்ள இயலாத சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வேறொரு தேதிக்கு இந்நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கோவையில் உள்ள அனைத்து தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளும் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.
ஆனால் வேறு ஒரு தேதிக்கு நிகழ்ச்சி நடத்த இயலாது என்று மாவட்ட நிர்வாகம் மறுத்ததால் நாளை நடைபெற உள்ள தேசிய உலக நுகர்வோர் தினவிழா நிகழ்ச்சியை அனைத்து நுகர்வோர் அமைப்புகளும் கலந்து கொள்வதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.
இதற்கான கடிதம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோருக்கு கடிதம் மூலம் தெரிவித்தனர்.