கோவையில் குடிநீர் விநியோகங்களை கையாள 'ஸ்கேடா சிஸ்டம்' என்ற முறையை அமல்படுத்த உள்ளோம் - மாநகராட்சி ஆணையர்

கோவையில் குடிநீர் விநியோகங்களை கையாள “ஸ்கேடா சிஸ்டம்” (SCADA system) (மேற்பார்வை கட்டுப்பாடு மற்றும் தரவு கையகப்படுத்தல்) என்ற முறையை அமல்படுத்த உள்ளோம் என்று கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் குடிநீர் விநியோகங்களை கையாள “ஸ்கேடா சிஸ்டம்” என்ற முறையை அமல்படுத்த உள்ளோம் என்று கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்காரா தெரிவித்துள்ளார்.

சிறுவாணி பிரச்சினை தொடர்ந்தால் கோடைக்காலத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்காரா தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்குச் சிறுவாணி, பில்லூர் அணைகள் மற்றும் ஆழியாறு, பவானி ஆற்றுப் பகுதிகளிலிருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சிறுவாணியிலிருந்து 10.1 கோடி லிட்டர் சதவீதம் தண்ணீர் தினமும் எடுக்க வேண்டும் ஆனால் கேரள அரசு இதற்கு ஒத்துழைப்பு தராததால் தினமும் 5 முதல் 6 லிட்டர் தண்ணீர் சதவீதத்தைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவர முடிகிறது. அதனால் தண்ணீர் தட்டுப்பாடு கோவையில் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

மேலும் நவம்பர் மாதம் கோவைக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைப்பதற்கு வழிவகை செய்ய மாநகராட்சி உட்படும் என தெரிவித்திருந்தார் அதனைச் செய்ய முடியாத சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.

இதனைக் குறித்து மாநகராட்சி ஆணையர் கூறியதாவது,

சிறுவாணி பிரச்சினையால் மாநகராட்சி பகுதிகளுக்குக் குடிநீர் வினியோகிப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் தொட்டிக்கு அருகாமையில் உள்ளவர்களுக்குத் தொடர்ச்சியாக நாற்பது மணிநேரம் தண்ணீர் கிடைத்து வருகிறது.

மேலும், சிறிது தூரம் ஆக உள்ளவர்களுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறையே தண்ணீர் கிடைக்கிறது என தெரிவித்தார். கோவை மாநகராட்சியில் ஒரு பகுதிக்கு 5 நாட்களுக்கு ஒரு முறையும் சில பகுதிகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறையும் இன்னும் சில பகுதிகளுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்ய முடிகிறது.

இதுபோன்ற தண்ணீர் விநியோகங்களை கையால “ஸ்கேடா சிஸ்டம்” என்ற முறையை அமல்படுத்த உள்ளோம், முறைக்காக மீட்டர் பயன்படுத்தவும் தமிழக அரசுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளோம்.

இப்பொழுது தொழில்நுட்ப அனுமதிக்காகக் காத்திருக்கிறோம் அனுமதி பெற்றவுடன் டென்டர் கோரி பணிகளை உடனே துவங்கிவிடுவோம். சிறுவாணி பிரச்சினை குறித்து தமிழக முதல்வருக்கு ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளோம் எனவும் தெரிவித்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...