ஹோட்டலில் தகராறு: கோவையில் விசிக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

ஹோட்டல் உரிமையாளரின் புகாரின் பேரில் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி கோட்டை சேது மற்றும் மூவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: ஹோட்டலில் தகராறு செய்த விசிக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை ராம் நகர் பகுதியில் அரிஸ்டோ என்ற பெயரில் லாட்ஜ் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை சின்னத்தம்பி என்பவரின் மகன் ராஜா (34) என்பவர் நடத்தி வருகிறார். இவரது லாட்ஜில் மைதீன் என்பவர் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி கோட்டை சேது மற்றும் மூன்று பேர் வந்து குடிபோதையில் தங்குவதற்கு அறை வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு லாட்ஜ் மேனேஜர் மைதீன் அறை தர மறுத்துள்ளார்.

இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். மீண்டும் மறுநாள் மாலை லாட்ஜுக்கு வந்த கோட்டை சேது உட்பட 4 நபர்கள் தங்களது கட்சியின் விசிட்டிங் கார்டு காண்பித்து நேற்று அதிகாலையில் அறை தர மறுத்தது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதையடுத்து இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் கோட்டை சேது மற்றும் அவருடன் வந்திருந்தவர்கள் ஹோட்டல் உரிமையாளர் ராஜா மற்றும் மைதீனை தாக்கியுள்ளனர். இதில் ராஜாவுக்கு முகம் மற்றும் மூக்கு, தாடையில் காயம் ஏற்பட்டது.

காயமடைந்த ராஜா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் ராஜா காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி கோட்டை சேது மற்றும் மூவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...