சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்றதில் கோவை மாநகர போலீஸ் முதலிடம்: போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் தகவல்

சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்றதில் கோவை மாநகர போலீஸ் மாநில அளவில் முதலிடம் பிடித்து உள்ளதாகத் போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் தெரிவித்து உள்ளார். 3 நிமிடம் 12 வினாடிகளில் சென்று கரூர் போலீஸ் 2-வது இடத்தையும், 3 நிமிடம் 17 வினாடிகளில் சென்று தூத்துக்குடி மாநகர போலீஸ் 3-வது இடத்தையும் பிடித்து உள்ளது.


கோவை: சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்றதில் கோவை மாநகர போலீஸ் மாநில அளவில் முதலிடம் பிடித்து உள்ளதாகத் போலீஸ் கமிஷனர் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் கூறியதாவது:-

கோவை மாநகரில் 15 போலீஸ் நிலையங்கள் உள்ளன. 24 ரோந்து வாகனங்கள் 24 மணிநேரமும் ரோந்து சுற்றி வருகின்றன. ஒரு சம்பவம் நடைபெற்றால் அவசர எண்ணான 100-க்கு பொதுமக்கள் தகவல் தெரிவிப்பார்கள்.

அந்த தகவல் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வரும். அதன் அடிப்படையில் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதி அருகே ரோந்து செல்லும் போலீசாருக்கு தகவல் அளிக்கப்படும். உடனே போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்வார்கள்.

போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் ரோந்து வாகனம் எத்தனை நிமிடங்களில் சம்பவ இடத்துக்குச் சென்று சேர்ந்தது என்று பதிவு செய்யப்படுகிறது.

அதன்படி 2 நிமிடம் 59 வினாடிகளில் ரோந்து வாகனங்கள் சம்பவ இடத்துக்கு சென்று கோவை மாநகர போலீஸ் மாநில அளவில் முதலிடத்தைப் பெற்று உள்ளது.

3 நிமிடம் 12 வினாடிகளில் சென்று கரூர் போலீஸ் 2-வது இடத்தையும், 3 நிமிடம் 17 வினாடிகளில் சென்று தூத்துக்குடி மாநகர போலீஸ் 3-வது இடத்தையும் பிடித்து உள்ளது. முதலிடம் பிடித்த கோவை மாநகர போலீசாருக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அனைத்து ரோந்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படுகிறது. கோவையில் கடந்த 2 மாதங்களாக விபத்து உயிரிழப்பு அதிகரித்து உள்ளது.

இதனைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேம்பால பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் போக்கு வரத்து நெரிசல் உள்ளது.

திருச்சி ரோடு சுங்கம், மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டம்பாளையம் பகுதிகளில் மேம்பாலப் பணிகள் முடிவடைந்து உள்ளதால் போக்குவரத்து பயன்பாட்டுக்கு வரும்போது போக்குவரத்து நெரிசல் மேலும் குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...