கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் மோசடி - வேலூரைச் சேர்ந்த ஆசாமிக்கு போலீசார் வலை வீச்சு..!

புகாரின் பேரில், கோவை ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆசாமியைத் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் 23 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த வேலூரைச் சேர்ந்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சுங்கம் பகுதியில் செயல்பட்டு வரும் சக்தி மேனேஜ்மென்ட் சர்வீஸ் என்ற நிறுவனத்தின் இயக்குனர் சாத்தப்ப தேவர் என்பவரின் மகன் போஸ் (64). இவருக்கு சென்னையைச் சேர்ந்த கந்தசாமி என்ற வழக்கறிஞர் நண்பர் ஆவார்.

இந்நிலையில், கந்தசாமி மூலம் வேலூர் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் போஸுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு அறிமுகமானார். பிரகாஷ் தனக்கு ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளை நன்கு தெரியும் என்றும், அரசு வேலை யாருக்காவது தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் போஸிடம் கூறியுள்ளார். இதேபோல வக்கீல் கந்தசாமியிடமும் பிரகாஷ் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, கந்தசாமி தனக்குத் தெரிந்த நபர்களிடம் இருந்து அரசு வேலைக்காக சில லட்ச ரூபாயை பிரகாஷிடம் கொடுத்துள்ளார். இது பற்றிய தகவலையும் போஸ் இடம் கூறியிருக்கிறார்.

இதை நம்பிய போஸ் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பிரகாஷ் குறித்து கூறியுள்ளார். மேலும், அரசு வேலை தேவைப்பட்டால் உடனடியாக அவர் ஏற்பாடு செய்து தருவார் எனவும் நம்பிக்கையூட்டும் விதமாகக் கூறினார்.

இந்நிலையில், கோவைக்கு முதுகு வலிக்காக சிகிச்சை பெற பிரகாஷ் குடும்பத்தோடு வந்துள்ளார். அப்போது பிரகாஷின் மனைவியும் போஸிடம் நம்பிக்கையூட்டும் விதமாக பேசி இருக்கிறார்.

இதையடுத்து, போஸின் நண்பர்கள் மற்றும் உறவினர்களான ஜான், தட்சிணா மூர்த்தி, செல்வராஜ், மோகன்தாஸ், செந்தில்ராஜ் உட்பட பலர் 23 லட்ச ரூபாய் வரை பிரகாஷிடம் கொடுத்துள்ளனர். ஆனால் பிரகாஷிடம் பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் வேலை கிடைக்கவில்லை. அவரும் விரைவில் வேலை கிடைத்து விடும் என நம்பிக்கை ஊட்டும் விதமாக கூறி வந்துள்ளார்.

இதற்கிடையே, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து கொடுத்த பணத்தை போஸ் உட்பட அனைவரும் திருப்பிக் கேட்டனர். ஆனால் பிரகாஷ் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து போஸ் கோவை ராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில், போலீசார் அரசு வேலை வாங்கித் தருவதாக 23 லட்ச ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக உள்ள பிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...