தென்னை மரம் முறிந்து விழுந்ததில் பைக்கில் சென்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: தென்னை மரம் முறிந்து விழுந்ததில் பைக்கில் சென்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலாக்கோட்டை அருகே உள்ள ஆவியம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்தி (24). இவர் கிணத்துக்கடவு பழைய சோதனைச்சாவடி அருகில் தங்கி இருந்து வீரப்பகவுண்டனூரில் உள்ள தனியார் குவாரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இதற்காக அவர் பைக்கில் வேலைக்குச் சென்றுவிட்டுத் திரும்புவது வழக்கம். அதன்படி குவாரியில் வேலையை முடித்துக்கொண்டு பைக்கில் வீட்டிற்குத் திரும்பினார்.
அவர் சொக்கனூர்- வீரப்பகவுண்டனூர் சாலையில் உள்ள சொக்கனூர் அருகே வந்தபோது திடீரென்று சாலை ஓரத்திலிருந்த தென்னை மரம் முறிந்து பைக்கில் வந்த விஜயகுமார் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் நிலாக்கோட்டை அருகே உள்ள ஆவியம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்தி (24). இவர் கிணத்துக்கடவு பழைய சோதனைச்சாவடி அருகில் தங்கி இருந்து வீரப்பகவுண்டனூரில் உள்ள தனியார் குவாரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இதற்காக அவர் பைக்கில் வேலைக்குச் சென்றுவிட்டுத் திரும்புவது வழக்கம். அதன்படி குவாரியில் வேலையை முடித்துக்கொண்டு பைக்கில் வீட்டிற்குத் திரும்பினார்.
அவர் சொக்கனூர்- வீரப்பகவுண்டனூர் சாலையில் உள்ள சொக்கனூர் அருகே வந்தபோது திடீரென்று சாலை ஓரத்திலிருந்த தென்னை மரம் முறிந்து பைக்கில் வந்த விஜயகுமார் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.