தென்னை மரம் முறிந்து விழுந்து பைக்கில் சென்ற வாலிபர் பலி

தென்னை மரம் முறிந்து விழுந்ததில் பைக்கில் சென்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: தென்னை மரம் முறிந்து விழுந்ததில் பைக்கில் சென்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலாக்கோட்டை அருகே உள்ள ஆவியம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்தி (24). இவர் கிணத்துக்கடவு பழைய சோதனைச்சாவடி அருகில் தங்கி இருந்து வீரப்பகவுண்டனூரில் உள்ள தனியார் குவாரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இதற்காக அவர் பைக்கில் வேலைக்குச் சென்றுவிட்டுத் திரும்புவது வழக்கம். அதன்படி குவாரியில் வேலையை முடித்துக்கொண்டு பைக்கில் வீட்டிற்குத் திரும்பினார். 

அவர் சொக்கனூர்- வீரப்பகவுண்டனூர் சாலையில் உள்ள சொக்கனூர் அருகே வந்தபோது திடீரென்று சாலை ஓரத்திலிருந்த தென்னை மரம் முறிந்து பைக்கில் வந்த விஜயகுமார் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...