பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் குடிமைப்பொருள் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது 200 கிலோ அரிசியை கடத்திச் சென்ற இருவரை போலீசார் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
கோவை: குடிமைப்பொருள் அதிகாரிகள் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்த போது டிவிஎஸ் எக்ஸ்எல் 200 கிலோ அரிசி கடத்திச் சென்ற இருவரை போலீசார் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை பொள்ளாச்சி அலகு காவல் ஆய்வாளர் கோபிநாத் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் தலைமை காவலர் காளிமுத்து ரமேஷ் குமார் மூவரும் இன்று 07/03/22 மதியம் 3 மணி அளவில் கோயமுத்தூர் to பாலக்காடு ரோடு குனியமுத்தூர் வாக்ஆப் பெட்ரோல் பங்க் அருகில் வாகன சோதனையிலிருந்தபோது without number plate TVS XL Super இருசக்கர வாகனத்தில் கொம்பரசன் (எ) கார்த்திக் -ஆ/ (வ -32) S/o ஜெயபால் என்பவர் சுமார் 200 கிலோ மதிக்கத்தக்க பொது விநியோக ரேஷன் அரிசியைக் கடத்தி சென்றார்.
இவரை பிடித்து விசாரணை செய்கையில் அதிக லாபம் கருதி நானும் எனது நண்பர் பிச்சைமுத்து 42, இருவரும் குனியமுத்தூர் பகுதியில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளா மாநிலத்திற்குக் கள்ளச் சந்தையில் விற்க கடத்தி சென்று அதிக லாபத்திற்கு விற்றதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிரி பிச்சமுத்து குனியமுத்தூர் பேருந்து நிலையம் பின்புறம் மறைவான பகுதியில் சுமார் 900 கிலோ பொது விநியோக ரேஷன் அரிசியுடன் கைது செய்து, அரிசி மற்றும் இருசக்கர வாகனம் மேற்படி இரண்டு பேரை காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்து செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப உள்ளனர்.