கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில தொழிலாளியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில தொழிலாளி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் பட்டணம் சாலையில் கஞ்சா விற்பனை செய்வதாக கிணத்துக்கடவு காவல் நிலையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற கிணத்துக்கடவு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரன் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த நபரைப் பிடித்து அவர் கையில் வைத்திருந்த பையைச் சோதனை செய்த போது அதில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தியதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சன் கடா என்பதும் இவர் அப்பகுதியில் கூலித் தொழிலாளியாக இருந்து கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து ரஞ்சன் கடாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் பட்டணம் சாலையில் கஞ்சா விற்பனை செய்வதாக கிணத்துக்கடவு காவல் நிலையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற கிணத்துக்கடவு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரன் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த நபரைப் பிடித்து அவர் கையில் வைத்திருந்த பையைச் சோதனை செய்த போது அதில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தியதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சன் கடா என்பதும் இவர் அப்பகுதியில் கூலித் தொழிலாளியாக இருந்து கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து ரஞ்சன் கடாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.