காலை 7 மணி முதல் ஆவாரம்பாளையம் பகுதியில் நின்றிருந்த வேனின் முன் பகுதி திடீரென தீ பிடித்து எரிந்தது. இதையடுத்து, அங்கு வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர்.
கோவை: கோவை ஆவாரம்பாளையம் அருகே மருத்துவ பொருட்களுடன் வந்து சாலையில் நின்ற கண்டெய்னர் வேன் முன்பகுதியில் தீ பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
கர்நாடக மாநிலம் பதிவு எண் கொண்ட கண்டெய்னர் வேன் ஒன்று, டெல்லியில் இருந்து கோவைக்கு மருத்துவ பொருட்களுடன் வந்துள்ளது.
காலை 7 மணி முதல் ஆவாரம்பாளையம் பகுதியில் நின்றிருந்த நிலையில், சற்று முன் வேன் முன் பகுதி திடிரென தீ பிடித்து எரிந்தது. இதையடுத்து, அங்கு வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர்.
தீ விபத்தில், கண்டெய்னர் வேன் முன் பகுதி முற்றிலுமாக எரிந்து நாசமானது. விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.