தில்லை நடராஜர் கோவிலை அரசுடைமையாக்க வேண்டும் - கோவையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

சோழர் ஆட்சிக் காலத்தில் தமிழரால் கட்டப்பட்ட இந்த கோவில் இது வரை அரசு வசம் வராமல், தீட்சிதர்கள் வசமே உள்ளதால் அரசுடைமையாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்.



கோவை: தில்லை நடராஜர் கோவிலை அரசுடைமையாக்கக் கோரி கோவையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் தற்போதும் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தில்லை நடராஜர் கோவிலுக்கு நுழைந்த தமிழ் பெண் ஒருவரை அங்கிருந்த தீட்சிதர்கள் வெளியே இழுத்துச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி, கடும் கண்டனங்கள் எழுந்தது.



இந்நிலையில், தில்லை நடராஜர் கோவிலை அரசுடமையாக்க கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய அவ்வமைப்பினர் கூறுகையில்,

சோழர் ஆட்சிக் காலத்தில் குறிப்பாக தமிழரால் கட்டப்பட்டது இந்த கோவில், ஆனால், இது வரை அரசு வசம் வராமல், தீட்சிதர்கள் வசமே உள்ளது. அதே போல் அங்கு சென்ற தமிழ் பெண்ணை வெளியே இழுத்துச் சென்றது தொடர்பாக தீட்சிதர்கள் மீது எந்த வழக்குகள் பதிவு செய்யவில்லை என தெரிவித்தனர்.



மேலும், தமிழக அரசு சிறப்புச் சட்டம் இயற்றி, சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலை அரசுடைமையாக்க வேண்டும் என கோரி கோசங்களை எழுப்பினர்.

அதே போல், ஜிஹாப் விவகாரத்தில் ஜிஹாப் அணிவது அவர்களது விருப்பம் அன்மையில் கர்நாடகாவில் தொடங்கிய பிரச்சனை ஓயவில்லை இதில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...