கடந்த 2 ஆண்டுகளாக பாதி சம்பளம் மட்டுமே வழங்கப்படுவதால் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கோவை: கோவையில் என்.டி.சி ஆலைகளை முழுமையாக இயக்கி முழு சம்பளத்தை வழங்க கோரி பெண் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கடந்த 2020ல் கொரோனா காரணமாக என்.டி.சி ஆலைகள் மூடப்பட்டது. அதனால் ஊழியர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், என்.டி.சி ஆலைகளை முழுமையாக இயக்கி முழுமையான சம்பளத்தை தர கோரி பல்வேறு என்.டி.சி ஆலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் சுமார் 20க்கும் மேற்ப்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதையடுத்து, மனு அளிக்க வந்தவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர்.
கடந்த 2 ஆண்டுகளாக பாதி சம்பளம் மட்டுமே வழங்கப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் மிகவும் சீர்குலைந்து உள்ளதாகவும், எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக தங்கள் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
இதன் காரணமாக, சுமார் 500க்கும் மேற்பட்டோர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.