கோவையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த கோரிக்கை விடுப்பதாக தீர்மானம்..!

கடந்த பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய போர், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் இருதரப்பு இராணுவமும், இராணுவ வீரர்களும் பாதிக்கப்படுவதால் போரை நிறுத்த கோரிக்கை.


கோவை: கோவையில் உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த கோரிக்கை விடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்கள் சந்தித்தார் அப்போது பேசிய அவர்,

அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், புதிய தமிழகம் கட்சியின் சார்பில் களம் கண்ட 65 வேட்பாளர்களையும், அதில் வெற்றி பெற்ற 7 வேட்பாளர்களையும், வாழ்த்தும் வகையில் புதிய தமிழகம் கட்சியின் உயர்மட்ட குழு சார்பாக பாராட்டு விழா கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் இன்று நடைபெறுவதாக தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பண பலம், அதிகார பலம், கூட்டணி பலத்தைத் தாண்டி, மக்கள் செல்வாக்கை நம்பி புதிய தமிழகம் கட்சி போட்டியிட்டதாகவும், அதில் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம் என்றும், வெற்றி பெற்ற 7 பேருக்கும், போட்டியிட்ட 65 பேருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

மேலும், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே, கடந்த பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய போர், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் இருதரப்பு இராணுவமும், இராணுவ வீரர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனவும், எனவே இந்த போரை நிறுத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி கோரிக்கை விடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரவித்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...