மேலும், அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவையில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கழிப்பறை அருகே சிலர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து, காட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்துகொண்டிருந்த சரவணம்பட்டியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (23), என்பவரை கைது செய்தனர்.
மேலும், அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதேபோல, கோவை சரவணம்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்க் வழியாக போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்துகொண்டிருந்த சின்னவேடம்பட்டியைச் சேர்ந்த சிவபிரசாந்த் (22) என்பவரை கைது செய்தனர்.
இதையடுத்து, அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.