புகாரின் பேரில், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் நகை மதிப்பீட்டாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 67 லட்சம் மதிப்பிலான 3819 கிராம் தங்க நகைகள் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்தனர்.
கோவை ஆவாரம்பாளையம் சென்டிரல் பேங்க் ஆப் இந்தியாவில் நகை மதிப்பீட்டாளராக கார்த்திக் (35) என்பவர் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இவர் பல்வேறு தருணங்களில் நகைகளை பொதுமக்கள் அடகு வைத்த போது, போலி நகைகளை மாற்றி வைத்து கார்த்திக் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, 3819 கிராம் தங்க நகைகளை மோசடி செய்ததாக கார்த்திக் மீது வங்கி மேலாளர் ஜெய்ராம் என்பவர் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கார்த்திக்கை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
கோவை ஆவாரம்பாளையம் சென்டிரல் பேங்க் ஆப் இந்தியாவில் நகை மதிப்பீட்டாளராக கார்த்திக் (35) என்பவர் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இவர் பல்வேறு தருணங்களில் நகைகளை பொதுமக்கள் அடகு வைத்த போது, போலி நகைகளை மாற்றி வைத்து கார்த்திக் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, 3819 கிராம் தங்க நகைகளை மோசடி செய்ததாக கார்த்திக் மீது வங்கி மேலாளர் ஜெய்ராம் என்பவர் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கார்த்திக்கை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.