உயிரிழந்தவரின் மனைவி கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே பாலார்பதி பகுதியில் முருங்கை மரத்தில் ஏறிய கூலித் தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிணத்துக்கடவு அருகே வீரப்பகவுண்டனூர், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் இவரது மகன் காளிமுத்து (வயது 52) இவர் பாலார்பதிபகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று வேலை செய்யும் இடத்தில் முருங்கை மரத்தில் ஏறியவர் திடீரென தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே காளிமுத்து உயிரிழந்தார்.
இதுகுறித்து உயிரிழந்த காளிமுத்துவின் மனைவி மாகாளி கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிணத்துக்கடவு அருகே வீரப்பகவுண்டனூர், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் இவரது மகன் காளிமுத்து (வயது 52) இவர் பாலார்பதிபகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று வேலை செய்யும் இடத்தில் முருங்கை மரத்தில் ஏறியவர் திடீரென தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே காளிமுத்து உயிரிழந்தார்.
இதுகுறித்து உயிரிழந்த காளிமுத்துவின் மனைவி மாகாளி கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.