தலைமையை மீறி தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் வென்ற திமுகவினர் பொறுப்பை விட்டு விலக வேண்டும் எனவும், பொறுப்பிலிருந்து விலகிவிட்டு தன்னை நேரில் சந்திக்க வேண்டும் எனவும் திமுகவினருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: தலைமையை மீறி தோழமைக் கட்சிக்கு எதிராக போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக பொறுப்பை விட்டு விலக வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று பதவியேற்றனர்.
இருப்பினும், சில இடங்களில் தலைமையை மீறி திமுகவினர் கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதற்கு கூட்டணி கட்சிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை ஒன்றை வைத்தனர்.
அதில், கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும் என தெரிவித்தனர்.
இந்நிலையில், மறைமுகத் தேர்தலில் தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்ற திமுகவினர் பொறுப்பை விட்டு விலக வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், தலைமையை மீறி தோழமைக் கட்சிக்கு எதிராக போட்டியிட்டு வென்றவர்கள் பொறுப்பை விட்டு விலகி நேரில் வந்து சந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று பதவியேற்றனர்.
இருப்பினும், சில இடங்களில் தலைமையை மீறி திமுகவினர் கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதற்கு கூட்டணி கட்சிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை ஒன்றை வைத்தனர்.
அதில், கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும் என தெரிவித்தனர்.
இந்நிலையில், மறைமுகத் தேர்தலில் தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்ற திமுகவினர் பொறுப்பை விட்டு விலக வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், தலைமையை மீறி தோழமைக் கட்சிக்கு எதிராக போட்டியிட்டு வென்றவர்கள் பொறுப்பை விட்டு விலகி நேரில் வந்து சந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.