திருப்பூர் மாநகராட்சியின் மேயராக திமுகவை சேர்ந்த தினேஷ் குமார், துணை மேயராக இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் துணை மேயராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆர்.பாலசுப்பிரமணியம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயருக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில், காலையில் மேயர் தேர்தல் நடைபெற்றது.

இதில், திமுக வேட்பாளர் தினேஷ்குமாரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுப் பதவியேற்றுக்கொண்டார்.
இதனை அடுத்து மதியம் துணை மேயர் தேர்தல் நடைபெற்றது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர் பாலசுப்பிரமணியம் என்பவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததன் காரணமாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து மாநகராட்சி ஆணையாளர் காந்தி குமார் அவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கினார்.

இதனையடுத்து துணை மேயராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயருக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில், காலையில் மேயர் தேர்தல் நடைபெற்றது.
இதில், திமுக வேட்பாளர் தினேஷ்குமாரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுப் பதவியேற்றுக்கொண்டார்.
இதனை அடுத்து மதியம் துணை மேயர் தேர்தல் நடைபெற்றது.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர் பாலசுப்பிரமணியம் என்பவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததன் காரணமாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து மாநகராட்சி ஆணையாளர் காந்தி குமார் அவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கினார்.
இதனையடுத்து துணை மேயராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.