திருப்பூர் மாநகராட்சி மேயராகிறார் ந.தினேஷ்குமார்: துணை மேயராகிறார் பாலசுப்பிரமணியம்.!!

திருப்பூர் மாநகராட்சியின் மேயராக திமுகவை சேர்ந்த தினேஷ் குமார், துணை மேயராக இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் துணை மேயராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆர்.பாலசுப்பிரமணியம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயருக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில், காலையில் மேயர் தேர்தல் நடைபெற்றது.



இதில், திமுக வேட்பாளர் தினேஷ்குமாரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுப் பதவியேற்றுக்கொண்டார்.

இதனை அடுத்து மதியம் துணை மேயர் தேர்தல் நடைபெற்றது.



இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர் பாலசுப்பிரமணியம் என்பவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததன் காரணமாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.



இதனையடுத்து மாநகராட்சி ஆணையாளர் காந்தி குமார் அவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கினார்.



இதனையடுத்து துணை மேயராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...