வெற்றி பெற்ற வேட்பாளருக்கு சான்றிதழ் வழங்க பேரூராட்சி நிர்வாகம் தாமதப்படுத்துவதாகக் கூறி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: கோவை பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியில் திமுக தலைமை அறிவிக்காத வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், சான்றிதழ் வழங்க பேரூராட்சி நிர்வாகம் தாமதப்படுத்துவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன.
நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இங்கு 15 வார்டுகளையும் திமுக உறுப்பினர்கள் கைப்பற்றினர்.
இந்நிலையில், இன்று பேரூராட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கும் மறைமுக வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில், திமுக அறிவித்த தலைவர் வேட்பாளர் ராகினி 7 வாக்குகள் பெற்ற நிலையில், தலைமை அறிவிக்காமல் திமுக சார்பில் போட்டியிட்ட வனிதா 8 வாக்குகள் பெற்று உள்ளார்.
இந்நிலையில், வெற்றி பெற்ற வனிதாவுக்கு சான்றிதழ் வழங்க பேரூராட்சி நிர்வாகம் தாமதப்படுத்துவதாகக் கூறி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுகவில் உள்ள இருதரப்பும் பேரூராட்சி அலுவலக வளாகத்தின் முன்பு குவிந்து கோஷம் எழுப்பி வருவதால் அங்கு பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது.

கோவை பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன.
நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இங்கு 15 வார்டுகளையும் திமுக உறுப்பினர்கள் கைப்பற்றினர்.
இந்நிலையில், இன்று பேரூராட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கும் மறைமுக வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில், திமுக அறிவித்த தலைவர் வேட்பாளர் ராகினி 7 வாக்குகள் பெற்ற நிலையில், தலைமை அறிவிக்காமல் திமுக சார்பில் போட்டியிட்ட வனிதா 8 வாக்குகள் பெற்று உள்ளார்.
இந்நிலையில், வெற்றி பெற்ற வனிதாவுக்கு சான்றிதழ் வழங்க பேரூராட்சி நிர்வாகம் தாமதப்படுத்துவதாகக் கூறி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுகவில் உள்ள இருதரப்பும் பேரூராட்சி அலுவலக வளாகத்தின் முன்பு குவிந்து கோஷம் எழுப்பி வருவதால் அங்கு பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது.