கோவையில் உள்ள திட வள மேலாண்மை மையத்தை மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு..!

இந்த திட வள மேலாண்மை மையம் தமிழ்நாடு முதலமைச்சரால்‌ 2021ம்‌ ஆண்டு நவம்பர்‌ 22ம்‌ தேதி துவக்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை ஒண்டிப்புதூர்‌, பட்டணம்‌ இட்டேரி சாலையிலுள்ள உள்ள திட வள மேலாண்மை மையத்தை மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, கிழக்கு மண்டலம்‌, வார்டு எண்‌ 57க்குட்பட்ட ஒண்டிப்புதூர்‌, பட்டணம்‌ இட்டேரி சாலையிலுள்ள திட வள மேலாண்மை மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால்‌ 2021ம்‌ ஆண்டு நவம்பர்‌ 22ம்‌ தேதி துவக்கி வைக்கப்பட்டது.



இந்த மையத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று (03.03.2022) நேரில்‌ பார்வையிட்டு, மையத்திலுள்ள தோட்டக்கழிவுகள்‌, திட வள கழிவுகள்‌, மக்கும்‌ கழிவுகள்‌ மற்றும்‌ மக்கும்‌ கழிவுகளைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும்‌ உரங்கள்‌ உள்ளிட்டவற்றை நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

இந்த ஆய்வின்போது, கிழக்கு மண்டல இளம்‌ பொறியாளர்‌ ராஜேஸ்‌ வேணுகோபால்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...