மன அழுத்தம், தூக்கமின்மை, விடுமுறை மறுப்பு என பல்வேறு காரணங்களால் காவலர்களுக்கு எளிதில் உடல்நலக் குறைவு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
கோவை: தமிழகத்தில் பல்வேறு காரணங்களினால் கடந்த இரண்டு மாதங்களில் 56 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.
தமிழகக் காவல்துறையில் டிஜிபி முதல் கான்ஸ்டபிள் வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
மன அழுத்தம், தூக்கமின்மை, உயரதிகாரிகளின் சித்திரவதை மற்றும் விடுமுறை மறுப்பு என பல்வேறு காரணங்களால் போலீசாருக்கு எளிதில் உடல்நலக் குறைவு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 56 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் கொரோனா மற்றும் புற்றுநோய்க்கு இருவர் பலியாகினர். பத்து பேர் தற்கொலை செய்து இறந்துள்ளனர். மாரடைப்பால் 9 பேர், விபத்தில் சிக்கி 12 பேர், நீண்டநாள் உடல்நலக்குறைவால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 2020ல் 337 காவலர்கள் மற்றும் 2021ல் இறப்பு 414 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகக் காவல்துறையில் டிஜிபி முதல் கான்ஸ்டபிள் வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
மன அழுத்தம், தூக்கமின்மை, உயரதிகாரிகளின் சித்திரவதை மற்றும் விடுமுறை மறுப்பு என பல்வேறு காரணங்களால் போலீசாருக்கு எளிதில் உடல்நலக் குறைவு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 56 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் கொரோனா மற்றும் புற்றுநோய்க்கு இருவர் பலியாகினர். பத்து பேர் தற்கொலை செய்து இறந்துள்ளனர். மாரடைப்பால் 9 பேர், விபத்தில் சிக்கி 12 பேர், நீண்டநாள் உடல்நலக்குறைவால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 2020ல் 337 காவலர்கள் மற்றும் 2021ல் இறப்பு 414 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.