கோவை ரத்தினபுரி அருகே மருந்துக் கடைக்குள் அத்துமீறி நுழைந்து ரூ. 6 லட்சம் மதிப்பிலான மருந்துகள் அபகரிப்பு..!

மருந்துக்கடை கட்டட உரிமையாளர் கடையை காலி செய்யுமாறு கூறி ஏற்பட்ட தகராறில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான மருந்துகளை அபகரித்த கட்டிட உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு.


கோவை: கோவையில் மருந்துக் கடைக்குள் அத்துமீறி நுழைந்து ரூ. 6 லட்சம் மதிப்பிலான மருந்துகளை அபகரித்த வழக்கில் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை, ஆர்.எஸ்.புரம், ராமலிங்கம் ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (62). இவர் ரத்தினபுரி, சிவானந்தா காலனி, ராஜூ நாயுடு லே அவுட்டில் பிரதீப் என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில், 35 ஆண்டுகளாக மருந்துக் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கட்டட உரிமையாளர் கடையை காலி செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதற்கிடையே, பிரதீப் மற்றும் இருவர் கடைக்குள் அத்துமீறி நுழைந்து சீனிவாசனை மிரட்டி, 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, ரத்தினபுரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் பிரதீப், அவரது மனைவி மற்றும் நண்பர் முத்து பாண்டி ஆகியோர் மீது கொலை மிரட்டல், திருட்டு உள்பட 5 பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...