வரகளியாறு பயிற்சி முகாமில் வன கால்நடை மருத்துவக் குழு சார்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பலி.
கோவை: கோவை பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில், காயங்களுடன் மீட்கப்பட்ட 5 வயது பெண் காட்டு யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்சிலிப் பகுதியில் கடந்த மாதம் 27ம் தேதி கால் மற்றும் உடல் பகுதிகளில் காயத்துடன் உணவின்றி தவித்து வந்த 5 வயது பெண் காட்டு யானையை வனத்துறையினர் மீட்டனர்.
இதனைத்தொடர்ந்து, கும்கி யானைகள் உதவியோடு மீட்கப்பட்ட யானையை வரகளியாறு பயிற்சி முகாமில், பிரத்தியேக கூண்டு அமைத்து அதில் அடைத்தனர்.
மேலும், வன கால்நடை மருத்துவக் குழு சார்பில் யானைக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டது.
இந்நிலையில், மருத்துவக் குழு கண்காணிப்பில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த யானை இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தது.

தற்போது, மருத்துவக் குழு சார்பில் இறந்த யானைக்கு உடல்கூறு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வுக்குப் பிறகு, யானை இறந்ததற்கான காரணம் குறித்து தெரியவரும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்சிலிப் பகுதியில் கடந்த மாதம் 27ம் தேதி கால் மற்றும் உடல் பகுதிகளில் காயத்துடன் உணவின்றி தவித்து வந்த 5 வயது பெண் காட்டு யானையை வனத்துறையினர் மீட்டனர்.
இதனைத்தொடர்ந்து, கும்கி யானைகள் உதவியோடு மீட்கப்பட்ட யானையை வரகளியாறு பயிற்சி முகாமில், பிரத்தியேக கூண்டு அமைத்து அதில் அடைத்தனர்.
மேலும், வன கால்நடை மருத்துவக் குழு சார்பில் யானைக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டது.
இந்நிலையில், மருத்துவக் குழு கண்காணிப்பில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த யானை இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தது.
தற்போது, மருத்துவக் குழு சார்பில் இறந்த யானைக்கு உடல்கூறு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வுக்குப் பிறகு, யானை இறந்ததற்கான காரணம் குறித்து தெரியவரும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.