பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் காட்டு யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலி..!

வரகளியாறு பயிற்சி முகாமில் வன கால்நடை மருத்துவக் குழு சார்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பலி.


கோவை: கோவை பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில், காயங்களுடன் மீட்கப்பட்ட 5 வயது பெண் காட்டு யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்சிலிப் பகுதியில் கடந்த மாதம் 27ம் தேதி கால் மற்றும் உடல் பகுதிகளில் காயத்துடன் உணவின்றி தவித்து வந்த 5 வயது பெண் காட்டு யானையை வனத்துறையினர் மீட்டனர்.

இதனைத்தொடர்ந்து, கும்கி யானைகள் உதவியோடு மீட்கப்பட்ட யானையை வரகளியாறு பயிற்சி முகாமில், பிரத்தியேக கூண்டு அமைத்து அதில் அடைத்தனர்.

மேலும், வன கால்நடை மருத்துவக் குழு சார்பில் யானைக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டது.

இந்நிலையில், மருத்துவக் குழு கண்காணிப்பில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த யானை இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தது.



தற்போது, மருத்துவக் குழு சார்பில் இறந்த யானைக்கு உடல்கூறு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வுக்குப் பிறகு, யானை இறந்ததற்கான காரணம் குறித்து தெரியவரும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...