கோவையில் காதல் திருமணம் செய்த இளம் ஜோடியினர் கடத்தப்பட்டதாக கூச்சலிட்டு, வண்டியில் இருந்து இறங்கி ஓடிய சம்பவத்தால் பரபரப்பு

பெண்ணின் குடும்பத்தார் அவர்களை சேர்த்து வைப்பதாக கூறி தேனி மாவட்டத்திற்கு காரில் அழைத்துச் சென்றதாகவும், அப்போது, தங்களை காரில் கடத்தியதாக அவர்கள் கூச்சலிட்டனர். உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று இருவரும் ரோட்டில் காப்பாற்றுங்கள் என்று கதறி அழுதனர்.



கோவை: கோவை லட்சுமி மில் சிக்னல் அருகே இரவு 9.30 மணியளவில் காரில் புதிதாக திருமணமான காதல் ஜோடியினர் தங்களை காரில் கடத்தி செல்வதாக சத்தம் போட்டனர். சத்தம் கேட்டதும், சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் உடனடியாக விரைந்து சென்று விசாரித்தனர்.

அப்போது அந்த வாலிபர் மற்றும் இளம் பெண் ஆகியோர் தங்களை காரில் கடத்தி செல்வதாக குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் பந்தைய சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விசாரணையில் அவர்கள் கோவை மணியகாரம்பாளையம் பகுதியை சேர்ந்த

விக்னேஷ்வர் (22), சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த சினேகா (19) என்பதும், இவர்கள் சமீபத்தில் காதலித்து காந்திபுரம் பகுதியில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

இந்த நிலையில், சினேகாவின் தந்தை அவர்களை சேர்த்து வைப்பதாக கூறி தேனி மாவட்டத்திற்கு காரில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, தங்களை காரில் கடத்தியதாக அவர்கள் கூச்சலிட்டனர்.



மேலும், காரில் இருந்தவர்கள் கையில் கத்தி வைத்திருந்ததாகவும் அவர்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று இருவரும் ரோட்டில் காப்பாற்றுங்கள் என்று கதறி அழுதனர்.

தற்போது, அவர்கள் இருவர் மற்றும் குடும்பத்தாரிடம் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவையில் உள்ள பிரதான சிக்னலில் பொதுமக்கள் முன்னிலையில் அரங்கேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...