கோவை சரவணம்பட்டி அருகே சிக்கன் 65 இல்லை எனக் கூறியதால் ஓட்டல் உரிமையாளரைத் தாக்கிய 2-வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் சாப்பிடச் சென்ற வாலிபர்களுக்கு சிக்கன் 65 தீர்ந்துவிட்டது என கூறிய ஓட்டல் உரிமையாளரைச் சரமாரியாகத் தாக்கினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விசுவாச புரத்தைச் சேர்ந்தவர் குருநாத் வயது 40, இவர் அந்த பகுதியில் ஓட்டல் கடை வைத்து நடத்தி வருகிறார். 2-பேர் இவரது கடைக்கு இரவு சாப்பிட வந்தனர். அவர்கள் சாப்பிட என்ன இருக்கிறது என்று கேட்டனர். அதற்கு குருநாத் தோசை இருப்பதாகக் கூறினார். ஆனால் அந்த வாலிபர்கள் சிக்கன் 65 உள்ளதா? என கேட்டனர்.
அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் ஓட்டல் உரிமையாளரைத் தாக்கி பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தாக்குதலில் தலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விசுவாச புரத்தைச் சேர்ந்தவர் குருநாத் வயது 40, இவர் அந்த பகுதியில் ஓட்டல் கடை வைத்து நடத்தி வருகிறார். 2-பேர் இவரது கடைக்கு இரவு சாப்பிட வந்தனர். அவர்கள் சாப்பிட என்ன இருக்கிறது என்று கேட்டனர். அதற்கு குருநாத் தோசை இருப்பதாகக் கூறினார். ஆனால் அந்த வாலிபர்கள் சிக்கன் 65 உள்ளதா? என கேட்டனர்.
அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் ஓட்டல் உரிமையாளரைத் தாக்கி பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தாக்குதலில் தலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.