கோவை மாநகராட்சியில் வருகிற 4-ம் தேதி மேயர் தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலையே துணை மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும், மாமன்ற கட்டிடமான விக்டோரியா ஹாலில் நடைபெற உள்ளது.
கோவை: கோவை மாநகராட்சியில் வருகிற 4-ம் தேதி மேயர் தேர்தல் நடைபெற உள்ளது.
கோவை மாநகராட்சியில் 100-வார்டுகளில் தேர்வு பெற்ற கவுன்சிலர்கள் இன்று மாமன்ற கூட்ட அரங்கில் பதவியேற்றுக் கொண்டனர். கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா கவுன்சிலர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளும் முன்பாக அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் என்னுடைய வார்டு பதவியேற்பு, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என்பதை நன்கு அறிவேன் எனக்கூறிவிட்டுப் பதவியேற்றனர். பதவியேற்பு விழா நடைபெற்ற மாமன்ற கூட்ட அரங்கில் உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
பதவியேற்பு விழாவை மக்கள் பார்க்கும் வகையில் மாநகராட்சி வளாகத்தில் எல்.இ.டி திரை அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் கோவை மாநகராட்சி யுடியூப் பக்கத்தில் பதவி பிரமாணம் நேரலை செய்யப்பட்டது.
இன்று பதவியேற்ற 100-கவுன்சிலர்களில் 93-பேர் மாமன்றத்திற்கு புதியவர்கள். 7-பேர் மட்டுமே ஏற்கனவே கவுன்சிலராக பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதும், 100-கவுன்சிலர்களில் 55- பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
100-வார்டுகளை கொண்ட கோவை மாநகராட்சியில் திமுக கூட்டணி 96-இடங்களை பிடித்து அருதி பெரும்பான்மையுடன் இருக்கின்றது. திமுக உறுப்பினர்கள் 73-பேர், காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் 9-பேர், சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் 4-பேர், சிபிஐ மாமன்ற உறுப்பினர்கள் 4-பேர், மதிமுக மாமன்ற உறுப்பினர்கள் 3-பேர், 1-மனித நேய மக்கள் கட்சி மாமன்ற உறுப்பினர், 2-கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உறுப்பினர்கள், அதிமுகவும் 3-மாமன்ற உறுப்பினர்கள், எஸ்.டி.பி.ஐ கட்சியின் சர்பில் 1-சுயேச்சை உறுப்பினர் என 100-உறுப்பினர்களும் இன்று பதவியேற்றனர்.
இதை தொடர்ந்து வருகிற 4-ம் தேதி மேயர் தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலையே துணை மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும், மாமன்ற கட்டிடமான விக்டோரியா ஹாலில் நடைபெற உள்ளது. கடந்த 1892ம் ஆண்டு கட்டப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த விக்டோரியா ஹால் அரங்கில் வருகிற 5-ஆண்டுகளுக்கான மாமன்ற கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாநகராட்சியில் 100-வார்டுகளில் தேர்வு பெற்ற கவுன்சிலர்கள் இன்று மாமன்ற கூட்ட அரங்கில் பதவியேற்றுக் கொண்டனர். கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா கவுன்சிலர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளும் முன்பாக அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் என்னுடைய வார்டு பதவியேற்பு, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என்பதை நன்கு அறிவேன் எனக்கூறிவிட்டுப் பதவியேற்றனர். பதவியேற்பு விழா நடைபெற்ற மாமன்ற கூட்ட அரங்கில் உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
பதவியேற்பு விழாவை மக்கள் பார்க்கும் வகையில் மாநகராட்சி வளாகத்தில் எல்.இ.டி திரை அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் கோவை மாநகராட்சி யுடியூப் பக்கத்தில் பதவி பிரமாணம் நேரலை செய்யப்பட்டது.
இன்று பதவியேற்ற 100-கவுன்சிலர்களில் 93-பேர் மாமன்றத்திற்கு புதியவர்கள். 7-பேர் மட்டுமே ஏற்கனவே கவுன்சிலராக பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதும், 100-கவுன்சிலர்களில் 55- பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
100-வார்டுகளை கொண்ட கோவை மாநகராட்சியில் திமுக கூட்டணி 96-இடங்களை பிடித்து அருதி பெரும்பான்மையுடன் இருக்கின்றது. திமுக உறுப்பினர்கள் 73-பேர், காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் 9-பேர், சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் 4-பேர், சிபிஐ மாமன்ற உறுப்பினர்கள் 4-பேர், மதிமுக மாமன்ற உறுப்பினர்கள் 3-பேர், 1-மனித நேய மக்கள் கட்சி மாமன்ற உறுப்பினர், 2-கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உறுப்பினர்கள், அதிமுகவும் 3-மாமன்ற உறுப்பினர்கள், எஸ்.டி.பி.ஐ கட்சியின் சர்பில் 1-சுயேச்சை உறுப்பினர் என 100-உறுப்பினர்களும் இன்று பதவியேற்றனர்.
இதை தொடர்ந்து வருகிற 4-ம் தேதி மேயர் தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலையே துணை மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும், மாமன்ற கட்டிடமான விக்டோரியா ஹாலில் நடைபெற உள்ளது. கடந்த 1892ம் ஆண்டு கட்டப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த விக்டோரியா ஹால் அரங்கில் வருகிற 5-ஆண்டுகளுக்கான மாமன்ற கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.