உக்ரைனில் இருக்கும் இந்திய மக்களை கொண்டுவர பிரதமர் மோடி தீவிர முயற்சி - கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன்..!

மேலும், மத்திய அமைச்சர்கள் நேரடியாக இப்பணியை கவனித்துக் கொண்டு வருவதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் தகவல்.


கோவை: உக்ரைனில் இருக்கும் இந்திய மக்களை கொண்டுவர பிரதமர் மோடி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால் கல்வி, வேலைவாய்ப்பு காரணமாக அங்கு சென்ற ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். மத்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வருகிறது.

இந்த நிலையில், உக்ரைனில் இருக்கும் இந்திய மக்களை கொண்டுவர பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய அமைச்சர்கள் நேரடியாக இப்பணியை கவனித்துக் கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.



இதனிடையே, உக்ரைனில் இருக்கும் மாணவர்களுக்கு உதவ தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. உதவ காத்துள்ளோம்.. என 7200331442 என்ற வாட்ஸ்ஆப் எண் கொடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...