திருப்பூர் மாநகராட்சியில் 60 மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் பதவியேற்பு..!

60 மாமன்ற உறுப்பினர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் கிரந்தி குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் தேர்வான 60 மாமன்ற உறுப்பினர்களும் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர்.



திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், 60 வார்டுகளில் தேர்வான உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.



இவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் கிரந்தி குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.



ஒவ்வொரு உறுப்பினர்களாக வந்து உறுதிமொழி எடுத்து பதவி ஏற்றுக்கொண்டனர். திருப்பூர் மாநகராட்சியில் திமுக 24 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியாக இருக்கும் சி.பி.ஐ - 6, சி.பி.எம் - 1, மதிமுக - 3, காங்கிரஸ் - 2, IUML - 1 , மனித நேய மக்கள் கட்சி - 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

அதே போல், அதிமுக - 17, தமிழ் மாநில காங்கிரஸ் - 1, பா.ஜ.க - 2, சுயேட்சைகள் - 2 பேர் என மொத்தம் 60 நபர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

இதில் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் பதவி ஏற்கும் போது உறுதிமொழி ஏற்றுக்கொண்ட பின் இன்குலாப் ஜிந்தாபாத் என்றும், பா.ஜ.க உறுப்பினர்கள் பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதிரம் என்றும் கூறினர்.

அதே போல், ஒரு சில திமுக உறுப்பினர்கள் அவர்களின் தலைவர் மீது ஆணையிட்டும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...