ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றி

சோமனூர் ரகத்திற்கு 19-சதவீதமும் இதர ரகத்திற்கு 15-சதவீதம் கூலி உயர்வு வழங்குவது என முடிவு எட்டப்பட்டது. இந்நிலையில், நாளை பொதுக்குழு கூடி வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறைவு செய்ய உள்ளனர்.


கோவை: ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றி பெற்றதால், நாளை பொதுக்குழு கூடி வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறைவு செய்ய உள்ளனர்.

கடந்த 8-ஆண்டுகளாகக் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கேட்டு பலகட்ட போராட்டம் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்த நிலையில் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

இரண்டாவது நாளான இன்று கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை வெற்றியில் முடிந்துள்ளது. அதன்படி சோமனூர் ரகத்திற்கு 19-சதவீதமும் இதர ரகத்திற்கு 15-சதவீதம் கூலி உயர்வு வழங்குவது என முடிவு எட்டப்பட்டது. இந்நிலையில், நாளை பொதுக்குழு கூடி வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறைவு செய்ய உள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சோமனூர் ரகத்திற்கு 23-சதவீதவும் இதர ரகத்திற்கு 20-சதவீதம் ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...