அவிநாசி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் கடும் அவதி

உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருவதால், வேலை நடக்கும் இடத்தைத் தவிர வேறு பகுதி வழியாக வாகனங்கள் சென்றுவர வேண்டி உள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


கோவை: கோவை அவினாசி சாலை உப்பிலிபாளையம் முதல் கோல்ட்வின்ஸ் வரை சுமார் பத்து கிலோமீட்டருக்கு உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது.

தற்போது பெரும்பாலான இடங்களில் தூண்கள் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. இந்தநிலையில் போக்குவரத்து சிக்னல் அமைத்து இடங்களில் தூண்கள் அமைக்கப்படாமல் இருந்தது. அந்த இடங்களில் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஹேப் கல்லூரியை அடுத்த அரசு மருத்துவக்கல்லூரி பகுதியில் சிக்னல் அருகே உள்ள மும்முனை சந்திப்பு மற்றும் தண்ணீர் பந்தல் டைடல் பார்க் ஒலம்பஸ்சாலை செல்லும் சந்திப்பில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதனால், அந்த பகுதி அடைக்கப்பட்டுள்ளது. வேலை நடக்கும் இடத்தைத் தவிர வேறு பகுதி வழியாக வாகனங்கள் சென்றுவர வேண்டி உள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கோர்ட்டில் இரு பகுதிகளிலும் 5-கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையாகச் சிக்கித் தவிக்கின்றன. அரசு ஊழியர்கள் மாணவ-மாணவிகள் சரியான நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாமலும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசல் உள்ளாகி அவர் அறிந்திருந்தார்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...