கோவையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: கொங்கு தமிழர் பேரவை நிறுவனர் மீது வழக்குப்பதிவு

கோவையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கொங்கு தமிழர் பேரவை நிறுவனரும், வழக்கறிஞருமான விஜயகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் வழக்கை நடத்தக் கேட்டு வந்த பெண்ணிடம் வழக்கறிஞர் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த 31-வயது பெண் ஒருவர் முதல் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்த நிலையில், கடந்த ஆண்டு பார்த்திபன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அந்த நபர், அப்பெண்ணின் 35-பவுன் நகைகள் மற்றும் ரூ.15-லட்சம் ஆகியவற்றை வாங்கி மோசடி செய்து விட்டதாகக் கூறப்படுகின்றது.

இரண்டாவது கணவரால் ஏமாற்றப்பட்ட அந்த பெண், இது தொடர்பான பிரச்சினைக்காகக் கொங்கு தமிழர் பேரவை என்ற அமைப்பின் நிறுவனரும், வழக்கறிஞருமான விஜயகுமார் என்பவரை சந்தித்துள்ளார். இந்த வழக்கினை விஜயகுமார் நடத்தி வந்த நிலையில், அந்த 31-வயது பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரில் கொங்கு தமிழர் பேரவை அமைப்பின் நிறுவனரும், வழகறிஞருமான விஜயகுமார் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகத் தெரிவித்துள்ளார். பணம் வாங்காமல் வழக்கை நடத்திக் கொடுப்பதாக உறுதியளித்த விஜயகுமார், ரூ.40-ஆயிரம் வரை பணத்தை வாங்கி இருப்பதுடன், தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வருகின்றார் எனவும், தனியாக வசிக்கும் தனது வீட்டின் முன்பு சத்தம் போடுவதாகவும், வழக்கு தொடர்பாகப் பேச வேண்டும் என கூறி தனியாக அலுவலகத்திற்கு வரச்சொல்லி தன்னிடம் அத்துமீறியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

அவரது நடவடிக்கைகள் காரணமாக வழக்கு தொடர்பாக அவரை தொடர்பு கொள்ளாமல் இருந்த நிலையில், தனக்கு உதவும் வேறு வழக்கறிஞர்கள் மீது தன் பெயரில் அவதூறாகக் கடிதம் எழுதி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளுக்கு அனுப்பி இருப்பதாகவும், தொடர்ந்து பல்வேறு வகைகளில் மனரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், ஆசைக்கு இணங்க வேண்டும் என அச்சுறுத்தி, மிரட்டல் விடுத்து வருவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரினை பெற்ற கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசார் , வழக்கறிஞர் விஜயகுமார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் உட்பட 3-பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கை நடத்தக் கேட்டு வந்த பெண்ணிடம் வழக்கறிஞர் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...