ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சமூகவலைதளம் மூலம் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்


ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்பை தடைசெய்யக் கோரியும், கோவையில் சமூக வலைதளங்கள் மூலமாக ஒன்றிணைந்த கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. 

அதன் ஒருபகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திய மாணவர்கள், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி வழங்கவில்லை எனில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என தெரிவித்தனர்.

மேலும், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.



இதேபோல, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க சட்ட திருத்தம் செய்ய முன்வராத மத்திய அரசைக் கண்டித்து கோவை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் 13 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...