ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சமூகவலைதளம் மூலம் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்


ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்பை தடைசெய்யக் கோரியும், கோவையில் சமூக வலைதளங்கள் மூலமாக ஒன்றிணைந்த கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. 

அதன் ஒருபகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திய மாணவர்கள், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி வழங்கவில்லை எனில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என தெரிவித்தனர்.

மேலும், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.



இதேபோல, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க சட்ட திருத்தம் செய்ய முன்வராத மத்திய அரசைக் கண்டித்து கோவை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் 13 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...