தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண்டு நாள் பயிற்சி மே 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடைபெறும். ரூ.1,770 கட்டணத்தில் உலர்ந்த தக்காளி, சாஸ், கற்றாழை பானம், மிட்டாய் தயாரிப்பு கற்பிக்கப்படும்.


Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூரில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் சிறப்பு பயிற்சி வகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19.05.2026 மற்றும் 20.05.2026 ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த பயிற்சி வேளாண் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பயனுள்ளதாக அமையும்.




பயிற்சியில் தக்காளியிலிருந்து உலர்த்தப்பட்ட தக்காளி, ஊறுகாய், சாஸ், ketchup, சூப் பவுடர், ஜாம் ஆகியவற்றை தயாரிக்கும் முறைகள் கற்பிக்கப்படும். கற்றாழையிலிருந்து பழரச பானம், தயார் நிலை பானம், பானம், மிட்டாய் ஆகியவற்றை தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்படும்.




இந்த பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770 (ரூ.1,500 + 18% GST) கட்டணம் செலுத்த வேண்டும். இந்த தொகையை பயிற்சியின் முதல் நாளன்று செலுத்தலாம்.




பயிற்சி அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003 இல் நடைபெறும். பயிற்சியாளர்கள் வாயில் எண் 7, மருதமலை சாலை வழியாக பயணித்து வரலாம்.




மேலும் விபரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641003 என்ற முகவரியிலும், 94885 18268 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...