17-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10-ஆண்டு சிறைத் தண்டனையும், ரூபாய் 20-ஆயிரம் அபராதம் விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை: கோவையில் 17-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10-ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் ஆழியாறு அடுத்த கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் விக்னேஷ்(20). ஓட்டுனராக பணியாற்றி வந்த விக்னேஷ், கடந்த 2019-ஆம் ஆண்டு பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் 17-வயது சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து, மாணவியைப் பழனி அழைத்துச் சென்று திருமணமும் செய்துள்ளார். இதற்கிடையே, சிறுமியைக் காணவில்லை என சிறுமியின் பெற்றோர் ஆழியாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர்.
இந்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் புகார் அளிக்கப்பட்ட 24- மணி நேரத்தில் சிறுமியையும், விக்னேஷையும் பிடிக்கின்றனர். பின்னர், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை அறிந்த காவல்துறையினர், விக்னேஷ் மீது போக்சோ, கடத்தல், குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பு வழங்கினார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விக்னேஷுக்கு 10-ஆண்டு சிறைத் தண்டனையும், ரூபாய் 20-ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
கோவை மாவட்டம் ஆழியாறு அடுத்த கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் விக்னேஷ்(20). ஓட்டுனராக பணியாற்றி வந்த விக்னேஷ், கடந்த 2019-ஆம் ஆண்டு பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் 17-வயது சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து, மாணவியைப் பழனி அழைத்துச் சென்று திருமணமும் செய்துள்ளார். இதற்கிடையே, சிறுமியைக் காணவில்லை என சிறுமியின் பெற்றோர் ஆழியாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர்.
இந்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் புகார் அளிக்கப்பட்ட 24- மணி நேரத்தில் சிறுமியையும், விக்னேஷையும் பிடிக்கின்றனர். பின்னர், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை அறிந்த காவல்துறையினர், விக்னேஷ் மீது போக்சோ, கடத்தல், குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பு வழங்கினார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விக்னேஷுக்கு 10-ஆண்டு சிறைத் தண்டனையும், ரூபாய் 20-ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.