மாநகராட்சியில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வருகிற 2-ந் தேதி காலை 10-மணிக்கு கோவை டவுன்ஹாலில் உள்ள விக்டோரியா அரங்கில் பதவியேற்க உள்ளனர்.
கோவை: மாநகராட்சியில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வருகிற 2-ந் தேதி கோவை டவுன்ஹாலில் உள்ள விக்டோரியா அரங்கில் பதவியேற்க உள்ளனர்.
கோவையில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்று தி.மு.க. கூட்டணி 96-இடங்களில் வெற்றி பெற்று கோவை மாநகராட்சியை கைப்பற்றியது.
இந்நிலையில், புதிய மாமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் விதமாக டவுன்ஹாலில் உள்ள விக்டோரியா அரங்கில் புதுப்பிக்கும் பணிகள் நடைப்பெற்று வந்தது.
இதனிடையே, இடம் மாற்றம் செய்யப்பட்டு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாமன்ற உறுப்பினர்கள் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கலையரங்கத்தில் பதவியேற்கின்றார்கள் என்று மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனையடுத்து, 96-சதவீத வேலைகள் நிறைவு பெற்றதால் மீண்டும் இடம் மாற்றம் செய்யப்பட்டு டவுன்ஹாலில் உள்ள விக்டோரியா அரங்கில் பதவியேற்பு விழா வருகிற 2-ந் தேதி காலை 10-மணிக்கு நடைப்பெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.