பொள்ளாச்சி அருகே தனியார் குளிர்பான தொழிற்சாலையிலிருந்து கழிவு நீர் பாசன கால்வாயில் கலப்பதால் விவசாய நிலங்கள் பாதிப்பு - விவசாயிகள் சார் ஆட்சியரிடம் கோரிக்கை..!

விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், துர்நாற்றம் வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பதாகவும் புகார்.


கோவை: கோவை பொள்ளாச்சி அருகே தனியார் குளிர்பான தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பாசன கால்வாயில் கலப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் சார் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு பாசன படுகைக்கு உட்பட்ட மண்ணூர், ஜலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளது.

ஜலத்தூர் கிராமம் அருகே தனியாருக்கு சொந்தமான குளிர்பான தொழிற்சாலை இயங்கி வருகிறது. ஏற்கனவே இந்த தொழிற்சாலை அனுமதி இன்றி செயல்படுவதாக விவசாயிகள் கூறிவரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக குளிர்பான தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பி.ஏ.பி கிளை வாய்க்காலில் கலக்கிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், மேலும் துர்நாற்றம் வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் இன்று அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்ரே சுபம் ஞான தேவ் ராவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.



அப்போது, கழிவு நீரை பாட்டிலில் நிரப்பி கொண்டு வந்து சார் ஆட்சியரிடம் முறையிட்டனர். உடனடியாக தனியார் குளிர்பான தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுத்து பாசன கால்வாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...