விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், துர்நாற்றம் வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பதாகவும் புகார்.
கோவை: கோவை பொள்ளாச்சி அருகே தனியார் குளிர்பான தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பாசன கால்வாயில் கலப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் சார் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு பாசன படுகைக்கு உட்பட்ட மண்ணூர், ஜலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளது.
ஜலத்தூர் கிராமம் அருகே தனியாருக்கு சொந்தமான குளிர்பான தொழிற்சாலை இயங்கி வருகிறது. ஏற்கனவே இந்த தொழிற்சாலை அனுமதி இன்றி செயல்படுவதாக விவசாயிகள் கூறிவரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக குளிர்பான தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பி.ஏ.பி கிளை வாய்க்காலில் கலக்கிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், மேலும் துர்நாற்றம் வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் இன்று அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்ரே சுபம் ஞான தேவ் ராவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது, கழிவு நீரை பாட்டிலில் நிரப்பி கொண்டு வந்து சார் ஆட்சியரிடம் முறையிட்டனர். உடனடியாக தனியார் குளிர்பான தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுத்து பாசன கால்வாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு பாசன படுகைக்கு உட்பட்ட மண்ணூர், ஜலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளது.
ஜலத்தூர் கிராமம் அருகே தனியாருக்கு சொந்தமான குளிர்பான தொழிற்சாலை இயங்கி வருகிறது. ஏற்கனவே இந்த தொழிற்சாலை அனுமதி இன்றி செயல்படுவதாக விவசாயிகள் கூறிவரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக குளிர்பான தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பி.ஏ.பி கிளை வாய்க்காலில் கலக்கிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், மேலும் துர்நாற்றம் வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் இன்று அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்ரே சுபம் ஞான தேவ் ராவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது, கழிவு நீரை பாட்டிலில் நிரப்பி கொண்டு வந்து சார் ஆட்சியரிடம் முறையிட்டனர். உடனடியாக தனியார் குளிர்பான தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுத்து பாசன கால்வாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.