இன்று அதிகாலை கோவை கணியூர் சுங்கச்சாவடி அருகே சாலையைக் கடக்க முயன்ற ஒன்றரை வயது பெண் புள்ளி மான் மீது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அந்த இடத்திலேயே மான் தலை நசுங்கி உயிரிழந்தது.
கோவை: கோவை கணியூர் சுங்கச்சாவடி அருகே இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் உயிரிழந்தது.
கோவை மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் மயில், மான், காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் உள்ளன.தற்போது,கோடை காலம் தொடங்கியுள்ளதால், வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி, குடியிருப்பு பகுதிகளுக்கும், விளை நிலங்களுக்குள் வழிதவறி வருவது வழக்கம்.
இந்நிலையில், இன்று அதிகாலை கோவை கணியூர் சுங்கச்சாவடி அருகே சாலையைக் கடக்க முயன்ற ஒன்றரை வயது பெண் புள்ளி மான் மீது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அந்த இடத்திலேயே மான் தலை நசுங்கி உயிரிழந்தது. இதுகுறித்து, சுங்கச்சாவடி ஊழியர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனா்.
அன்னூரிலிருந்து வழிமாறி வாகராயம்பாளையம் பகுதி வழியாக,கணியூருக்கு இந்தமான்இரவில் வந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், இப்பகுதியில் மான் அடிபட்டு இறப்பது இதுதான் முதல்முறை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
சாலை விபத்தில், புள்ளிமான் இறந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.