கிணத்துக்கடவு சிங்கையன்புதூரில், நாட்டு இன காளைகளை பாதுகாக்க ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில், காளைகள் சீறிப்பாய்ந்து சென்றதைக் கண்டு பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள சிங்கையன்புதூர் மற்றும் கல்லாபுரம் கிராம மக்கள் சார்பில் இன்று சிங்கையன் புதூர் பகுதியில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.

இந்தப் பந்தயத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்தும் மற்றும் கேரளா மாநிலத்திலிருந்தும் 250-க்கும் மேற்பட்ட ஜோடி நாட்டு இன காளைகள் பங்கேற்றது.

200-மீட்டர், 300-மீட்டர் தூர கணக்கில் நடைபெற்ற பந்தயத்தில் மாட்டு வண்டியில் பூட்டப்பட்ட இரட்டை காளை மாடுகள் சீறிப்பாய்ந்து சென்றதைக் கண்டு பார்வையாளர்கள் கைதட்டி மகிழ்ச்சி அடைந்தனர்.
அழிந்து வரும் நாட்டு இன மாடுகளைப் பாதுகாக்க வலியுறுத்தியும், நாட்டு மாடுகள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தியும் இந்த ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டதாகப் போட்டி ஏற்பாட்டாளர்கள் சிவன்மலை கோபால் மற்றும் ரேக்ளா சங்கத்தலைவர் காளிமுத்து ராஜன் தெரிவித்தனர்.
இந்த பந்தயத்தின் முடிவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்குத் தங்கக் காசு வழங்கப்பட்டது.
இந்தப் பந்தயத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்தும் மற்றும் கேரளா மாநிலத்திலிருந்தும் 250-க்கும் மேற்பட்ட ஜோடி நாட்டு இன காளைகள் பங்கேற்றது.
200-மீட்டர், 300-மீட்டர் தூர கணக்கில் நடைபெற்ற பந்தயத்தில் மாட்டு வண்டியில் பூட்டப்பட்ட இரட்டை காளை மாடுகள் சீறிப்பாய்ந்து சென்றதைக் கண்டு பார்வையாளர்கள் கைதட்டி மகிழ்ச்சி அடைந்தனர்.
அழிந்து வரும் நாட்டு இன மாடுகளைப் பாதுகாக்க வலியுறுத்தியும், நாட்டு மாடுகள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தியும் இந்த ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டதாகப் போட்டி ஏற்பாட்டாளர்கள் சிவன்மலை கோபால் மற்றும் ரேக்ளா சங்கத்தலைவர் காளிமுத்து ராஜன் தெரிவித்தனர்.
இந்த பந்தயத்தின் முடிவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்குத் தங்கக் காசு வழங்கப்பட்டது.