பொள்ளாச்சியில் பள்ளி மழலைகள் மனிதச்சங்கிலி ஆர்ப்பாட்டம்

ரஷ்யா- உக்ரைன் இடையே நடக்கும் போர் மழலை குழந்தைகளையும் பாதித்துள்ள இந்த நிலையை மாற்ற அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போரை நிறுத்தும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று மனிதச்சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மழலைகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே நடக்கும் போரை நிறுத்த வலியுறுத்தி பொள்ளாச்சியில் பள்ளி மழலைகள் மனிதச்சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

உலகம் முழுவதும் உள்ள அனைத்து வகையான மக்களையும் உற்றுநோக்க வைத்துள்ளது ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் இடையேயான போர், கடந்த சில தினங்களாக இரு நாடுகளுக்கும் இடையே கடும் ஆயுதப் போர் நிலவி வரும் சூழலில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த போரை நிறுத்த வலியுறுத்தி உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் போராட்டங்களை நடத்தி போருக்கான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாகப் பொள்ளாச்சி ஆலாங்கடவு பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போரை நிறுத்த வேண்டும் என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளைக் கையில் ஏந்தியவாறு பொள்ளாச்சி திருச்சூர் சாலையில் உள்ள ஆலாங்கடவு பகுதியில் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த போராட்டத்தில், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையான போரை உடனே நிறுத்த வேண்டும், அமைதி சூழல் நிலவ வேண்டும் என்று மழலைகள் எழுப்பிய கோஷங்கள் அவ்வழியாக வந்த பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

இதையடுத்து, மனிதச்சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மழலைகளுக்கு அவ்வழியே சென்ற பொதுமக்கள் பிஸ்கட்டுகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றைக் கொடுத்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். ரஷ்யா உக்ரைன் இடையே நடக்கும் போர் மழலை குழந்தைகளையும் பாதித்துள்ள இந்த நிலையை மாற்ற அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போரை நிறுத்தும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று மனிதச்சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மழலைகள் கூறுகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...